Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM
பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 தேர்ச்சியை அடிப்படை கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கான எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் இணையதள சர்வர் கோளாறுகாரணமாக சிரமம் ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிச. 19 நள்ளிரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் 21-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை ஆன்லைனில் தேர்வுக் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
கட்டணத்தை செலான் மூலம் செலுத்த விரும்புவோர் 23-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரைஆன்லைனில் செலானை உருவாக்கி வங்கிகளில் 24-ம்தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT