Published : 16 Dec 2020 03:14 AM
Last Updated : 16 Dec 2020 03:14 AM
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரண மாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்தக்கோரி காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். இதற்கு அமைச்சர் அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் காரணமாக கடந்த மழைக்கால கூட்டத் தொடர் தாமதமாக நடத்தப்பட்டது. அந்த கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப் பட்டது. தற்போது டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. விரைவில் கரோனா தடுப் பூசி அறிமுகமாகும் என்று எதிர்பார்க் கிறோம்.
இந்த சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது. அப்போது குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டாம் என்று பெரும்பாலான தலை வர்கள் கருத்து கூறினர். இதை ஏற்று குளிர்கால கூட்டத் தொடர் நடத் தப்படவில்லை. வரும் ஜனவரியில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, "குளிர்கால கூட்டத் தொடரை நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் பரிந்துரை செய்யவில்லை. பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூட்டத் தொடர்களே நடத்தப்படும்போது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மறுப்பது ஏன்?
விவசாயிகள் பிரச்சினை உட்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. குளிர் கால கூட்டத்தொடரை நடத்தினால் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று பாஜக அஞ்சுகிறது. இதன் காரண மாகவே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT