Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு (தமிழகம் மற்றும் புதுச்சேரி) குக்கர் சின்னத்தையும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு (புதுச்சேரி மட்டும்) டார்ச் லைட் சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நேற்று சின்னங்களை ஒதுக்கியது. அதன் விவரம்:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு (தமிழகம் மற்றும் புதுச்சேரி) குக்கர் சின்னமும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு (புதுச்சேரி மட்டும்) டார்ச் லைட் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு (தமிழகம், புதுச்சேரி) விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மின்கம்பம், எம்ஜிஆர். மக்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச், சாமானிய மக்கள்நல கட்சிக்கு வாக்கிங் ஸ்டிக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டார்ச் லைட் சின்னத்தில்போட்டியிட்டது. தற்போதும் டார்ச்லைட் சின்னத்தை முன்னிறுத்தியேகமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் அக்கட்சிக்கு தமிழகத்தில் போட்டியிட டார்ச் லைட்சின்னம் ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT