Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

வழிப்பறி செய்த பைக் திருடன் கைது

சென்னை, எம்.ஜி.ஆர் நகர், சூளைபள்ளம், ராஜராஜ சோழன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முருகன். இவரது ஆட்டோவில் கடந்த 12-ம்தேதி இரவு 11 மணியளவில் சவாரி ஏறிய நபர், எம்.ஜி.ஆர் நகர், அண்ணாமெயின் ரோடு, அஜந்தா பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது முருகனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பினார்.

இதுகுறித்து, எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் முருகன் புகார்கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சிசிடிவிகளில் பதிவான காட்சிகள் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டது.

இதில், முருகனிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையில் விஜயகுமார் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அவரிடமிருந்து விலையுயர்ந்த 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x