Published : 13 Dec 2020 03:15 AM
Last Updated : 13 Dec 2020 03:15 AM

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை3.6 லட்சமாக குறைந்தது

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 30,006 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 98,26,775 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93,24,328 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 3,59,819 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 442 பேர் உயிரிழந்தனர். கடந்த 7 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 500-க்கும் கீழாக உள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 1,42,628 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புதிதாக 4,268 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 74,408 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 5,949 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 60,029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x