Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான தேசிய மைக்ரோ லோக்-அதாலத்தில் 82 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
உச்ச நீதிமன்ற மூத்த நீதி பதி, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலை வரின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் தேசிய லோக்-அதாலத் பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் 2-வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு முதல் தேசிய லோக்-அதா லத் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட்டது. அதன்பிறகு கரோனா பரவல் காரணமாக தேசிய லோக்- அதாலத் நடத் தப்படவில்லை. இந்நிலையில் இன்று (டிச.12) தமிழகம் முழு வதும் மாவட்ட அளவிலான நீதிமன்றங்களில் நடைபெற வுள்ளது.
கரோனா தடுப்பு நட வடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் இந்த லோக்-அதாலத் நடைபெற வில்லை. மாவட்ட அளவிலான இந்த லோக்-அதாலத்தில் காசோலை மோசடி வழக்கு கள், விபத்து இழப்பீடு, தொழி லாளர் நல வழக்குகள் உள் ளிட்ட 82 ஆயிரம் வழக்கு கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பரஸ்பர தீர்வு காணப்படவுள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள், சமரச தீர்வாளர்கள் அடங்கிய 354 சிறப்பு அமர்வுகள் அமைக் கப்பட்டுள்ளன என மாநில சட் டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான கே.ரா ஜசேகர் தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை நீதிபதியுமான ஆர்.செல்வக்குமார் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக்-அதாலத், உயர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள மாவட்ட நீதிமன்றத் தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள உரிமையியல் மற்றும் குற்ற வியல் வழக்குகளும், மின் இணைப்பு, குடிநீர் பிரச்சினை, விபத்து, காசோலை மற்றும் கல்விக்கடன் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன் படுத்திக் கொண்டு நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காண லாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT