Published : 12 Dec 2020 03:16 AM
Last Updated : 12 Dec 2020 03:16 AM

அலோபதி - ஆயுஷ் இணைக்க எதிர்ப்பு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நோயாளிகள் கடும் அவதி

அலோபதி மருத்துவ முறையையும் (ஆங்கில மருத்துவம்) சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி ஆகிய ஆயுஷ் மருத்துவ முறைகளையும் ஒன்றாக இணைத்து செயல்படுத்துவது குறித்த அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டது. ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும்அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து பணிகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் சி.என்.ராஜா, செயலாளர் ஏ.கே.ரவிக்குமார் கூறியபோது, ‘‘ஒரே நாடு ஒரே மருத்துவம் என்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். உயிருக்கு ஆபத்தான அரசாணையை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து வரும் 28-ம் தேதி நடக்கும் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x