Published : 11 Dec 2020 07:31 AM
Last Updated : 11 Dec 2020 07:31 AM

தி.மலை அண்ணாமலையார் கோயிலில்ரூ.91.94 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: தி.மலை அண்ணாமலையார் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில், துர்க்கை அம்மன் கோயில், அஷ்டலிங்க கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது.

அந்த காணிக்கை தொகையை, ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பிறகு எண்ணப்படுகிறது. அதன்படி, கார்த்திகை மாத பவுர்ணமி முடிந்ததும், காணிக்கை தொகையை கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்படத்தில் நேற்று எண்ணப்பட்டது. அதில், ரூ.91,94,508 மற்றும் 254 கிராம் தங்கம், 543 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. உண்டியல் எண்ணும் பணி கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகள் கண்காணித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x