Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

தமிழகத்தில் புதிதாக 1,312 பேருக்கு தொற்று கரோனா பரிசோதனை 1.25 கோடியை கடந்தது முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 1,312 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 770, பெண்கள் 542 என மொத்தம் 1,312 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 307, கோவையில் 124 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 91,552 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 7 லட்சத்து 69,048 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 359 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,389பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 10,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என நேற்று 16 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 7 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,882 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 17,850,கோவையில் 49,696, செங்கல்பட்டில் 48,261, திருவள்ளூரில் 41,418 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 228 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 40,103 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 64,010பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 27,994 குழந்தைகள், 13 வயதுமுதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 61,147 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து2,411 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 17,850, கோவையில் 49,696, செங்கல்பட்டில் 48,261, திருவள்ளூரில் 41,418 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x