Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM
தமிழகத்தில் புதிதாக 1,312 பேர்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஆண்கள் 770, பெண்கள் 542 என மொத்தம் 1,312 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 307, கோவையில் 124 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 91,552 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 7 லட்சத்து 69,048 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 359 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,389பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 10,695 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 7 பேர், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என நேற்று 16 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 7 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,809 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,882 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 17,850,கோவையில் 49,696, செங்கல்பட்டில் 48,261, திருவள்ளூரில் 41,418 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 228 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 40,103 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 64,010பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 27,994 குழந்தைகள், 13 வயதுமுதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 61,147 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து2,411 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 17,850, கோவையில் 49,696, செங்கல்பட்டில் 48,261, திருவள்ளூரில் 41,418 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT