Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

கரோனா காலத்திலும் ஆவின் வருவாய் ரூ.277 கோடி அதிகம்

கரோனா தொற்று, புயல், மழைகாலத்திலும் ஆவின் நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.277 கோடி அதிகரித்துள்ளதாக ஆவின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆவின் பால் விற்பனை மற்றும்பால் உப பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-20-ம் ஆண்டு ஏப். முதல் செப்.வரை ரூ.3,358 கோடியே 21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், ஏப். முதல்செப். வரை கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் ரூ.2,392 கோடியே 95லட்சம், கூட்டுறவு இணையம் மூலம் ரூ.1,242 கோடியே 54 லட்சம் என ரூ.3 ஆயிரத்து 635 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

அதன்படி இந்த நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.277 கோடி வருவாய்அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x