Published : 06 Dec 2020 03:18 AM
Last Updated : 06 Dec 2020 03:18 AM

தொடர் மழையால் முளைவிட ஆரம்பித்த நெற்பயிர்கள்

தொடர் மழை காரணமாக அறுவடை செய்த நெற் பயிர்கள் முளைவிட ஆரம்பித்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமன்குளம் ஊராட்சி மற்றும் மலை ரெட்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சில கிராமங் களில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சிலர் நெற்பயிரை அறுவடை செய்து களத்தில் கட்டு கட்டாக அடுக்கி வைத்திருந்தனர்.

இதற்கிடையில், ‘நிவர்’ புயலைத் தொடர்ந்து ‘புரெவி’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் மழையால் அறுவடை செய்து அடுக்கி வைத்திருந்த நெற்பயிர் முழுவதும் முளைவிட ஆரம்பித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே, தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x