Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

நிவாரண முகாம்களில் 331 பேர் தங்கவைப்பு

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 331 பேர் 3 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “சென்னையில் வில்லிவாக்கத்தில் 1, செம்மஞ்சேரியில் 2 இடங்கள் என 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 141 ஆண்கள், 138 பெண்கள், 52 குழந்தைகள் என 331 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் தரமான, சுவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x