Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

திட்டக்குடி அருகே ஏரி உடைப்பை சரி செய்த விவசாயிகள்

திட்டக்குடி அருகே சமீபத்தில் குடி மராமத்துத் திட்டத்தின் கீழ் தூர் வாரப்பட்டதாக கூறப்படும் ஏரியில் மழைநீர் நிரம்பியுள்ளது. நேற்று அதிகாலை ஏரியில் உடைப்பு ஏற்பட்டு விளைநில பகுதிக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதையறிந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, ஏரியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர்.

இதுகுறித்துவிவசாயிகள் கூறுகையில், "திட்டக்குடி அடுத்துள்ள கோடங்குடி கிராமத்தில் அண்மையில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் சர்வே எண் 77-ல் 144.5 பரப்பளவில் ஏரியை தூர்வார அரசு ரூ.16.5 லட்சம் நிதி ஒதுக்கியது. ஏரியை புனரமைப்பு மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் அதை சரிவர சீரமைக்கவில்லை. இதனால் கரை உடைந்து தண்ணீர் விளைநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் சரியான முறையில் கரையை சீரமைக்காததால் மழை நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது" என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x