Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

ஆவினில் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி பண பரிவர்த்தனை ஆவின் மேலாண் இயக்குநர் தகவல்

தமிழகத்தில் பால் தொழில் மூலம் ஆவினில் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி பண பரிவர்த்தனை நடைபெறுவதுடன், விவசாயிகள் கையில் தினசரி ரூ.17 கோடி புழங்கி வருவதாக ஆவின் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கூட்டுறவு அமைப்பின்கீழ் மொத்த பால் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 20 லட்சமாகும். கூட்டுறவு அமைப்பின் கீழ்உற்பத்தி செய்யப்படும் பால், 9,325பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பால் உற்பத்தி செய்வோர் வழங்கும் பாலுக்கு நியாயமான விலை, மத்திய அரசின் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம், கால்நடை மருத்துவ உதவிகளை, ஆவின் மூலம் விவசாயிகளுக்கு அளித்து இத்திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பால் உற்பத்தி 2 கோடியே 10 லட்சம் லிட்டராகும். அதில் ஆவினால் 40 லட்சம் லிட்டர்கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பால் தொழில் மூலம் ஆவினில் ஆண்டுக்கு ரூ.6,500 கோடி பண பரிவர்த்தனை நடக்கிறது. இதன்மூலம் விவசாயிகள் கையில் தினமும் ரூ.17 கோடி புழங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x