Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இணையவழியில் நடைபெறாது சிபிஎஸ்இ அதிகாரிகள் தகவல்

10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இணைய வழியில் நடத்தப்படாது. வழக்கம்போல் வகுப்பறையிலேயே நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அதிகாரிகள் கூறியதாவது:

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுநடத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் இன்னும்இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதேநேரம் பொதுத்தேர்வுகள் இணையவழியில் நடைபெறாது.

விரைவில் கால அட்டவணை

கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போல் வகுப்பறைகளில் நடத்தப்படும். செய்முறை தேர்வுகள் மற்றும் தேர்வுக் கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x