Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உறுதிசெய்வோம் பிரதமர் நரேந்திர மோடி கருத்து

மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகளை உறுதி செய்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் நேற்று கடைப்பிடிக் கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட் டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஐ.நா. சபை அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், கரோனா கால கட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வள மான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்" என்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் கருத்துருவின் படி மாற்றுத் திறனாளிகளின் வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் மன உறுதி, வலியை தாங்கும் மனோதிடம் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x