Published : 02 Dec 2020 03:15 AM
Last Updated : 02 Dec 2020 03:15 AM

சாதிவாரி புள்ளிவிவரங்களை ஆராய ஆணையம்: முதல்வர்

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறை களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பை பெற்றுத் தந்தார். இதன்மூலம், தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்ததுடன், ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று அனைவராலும் போற்றப்படுகிறார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு கால கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடை வதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள் ளது. மேலும், 69 சதவீத இட ஒதுக் கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை எதிர்கொள்ள இத்தகைய புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் சாதிவாரி யாக அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப் படுகின்றன. தமிழகம் முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவலும் கிடைக்கும்.

எனவே, சாதிவாரியான தற்போ தைய நிலவரப்படியான புள்ளிவிவரங் களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப் பிக்க பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும். சமூக நீதியைக் காப் பதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த அளவுக்கு உறுதியாக இருந்தார் என்பதை நாடறியும். அவரது வழியில் செயல்படும் இந்த அரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.

வன்னிய சமூகத்தினருக்கு 20% தனி இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி பாமக சார்பில் நேற்று போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராம்தாஸ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தங்கள் கோரிக்கை குறித்து வலியறுத்தினர். ஏற்கெனவே, தமிழகத்தில் சாதிவாரி யான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக நிர்வாகிகள் முதல் வரை சந்தித்த நிலையில், தற்போது சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்த ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது குறிப் பிடத்தக்கது. ஆணையத்தின் தலைவர் யார், எத்தனை உறுப்பினர்கள் என்பன குறித்த தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x