Published : 01 Dec 2020 03:15 AM
Last Updated : 01 Dec 2020 03:15 AM

பரிசோதனை 1.20 கோடியை கடந்தது தமிழகத்தில் 1,410 பேருக்கு புதிதாக கரோனா தொற்று முதியவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 1,410 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். பரிசோதனை எண்ணிக்கை 1.20 கோடியை கடந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 872, பெண்கள் 538 என மொத்தம் 1,410 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 385, கோவையில் 146 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 81,915 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 7,761 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 59,206 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 386 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 3,749 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 6 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என நேற்று 9 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 3 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,850பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 15,360, கோவையில் 48,725, செங்கல்பட்டில் 47,575, திருவள்ளூரில் 40,957 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 220 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 20 லட்சத்து 60,001பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 62,616பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 27,567 பேர், 13 வயது முதல் 60 வயதுக்குஉட்பட்டவர்கள் 6 லட்சத்து 53,929 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1 லட்சத்து 419 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x