Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM
சென்னை, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனக்கு ஏற்பட்ட பாலியல்அத்துமீறல் குறித்து சென்னை வண்ணாரப்பேட்டை அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவுதுணை ஆணையர் ஜெயலட்சுமிமேற்பார்வையில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரியதர்ஷனி விசாரணை நடத்தினார்.
இவ்விசாரணையில், 13வயது சிறுமியை அவரது தாயாரே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், சிறுமியின்தாய் ஷாகிதாபானு, மதன்குமார்,செல்வி, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 8 பேரை கடந்த 12-ம்
தேதி போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி வண்ணாரப்பேட்டை, எம்.சி.சாலையைச் சேர்ந்த தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான ராஜேந்திரன் என்பவரும் அவரின் நண்பரும் சென்னை எண்ணுார் காவல் நிலைய ஆய்வாளருமான புகழேந்தியும் சிறுமியிடம் பாலி
யல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், தரகர்களாக செயல்பட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆய்வாளர்புகழேந்தி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை
பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை வண்ணாரப்பேட்டை மகளிர் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுமியிடம் அத்துமீறியஅனைவரையும் கைது செய்யும்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக காவல் ஆய்வாளர்தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்பேரில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபாஜி என்பவரை மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.இவர் பாலியல் அத்துமீறலில்ஈடுபட்டதை சிறுமியும் உறுதி செய்துள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT