Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் சார்பில் 15 வயதுக்கு மேலான எழுத, படிக்க தெரியாதவர்கள் நலன்கருதி ‘கற்போம், எழுதுவோம்’ என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்காக அந்தந்தப் பகுதி பள்ளிகளில் மையங்கள் அமைத்து வேலைநாட்களில் தினமும் 2 மணி நேரம் பாடம்கற்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கற்போர் மையங்கள் இன்று (நவ.30)முதல் செயல்பட உள்ளன.இதற்கு தேவையான வசதிகளைசெய்துதர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT