Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

கரோனா தடுப்பூசி பணியை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைப்பு

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பூசி செலுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுதற்காக மாநில அளவில் வழிகாட்டு குழு மற்றும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பணிக்குழுவை அமைத்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதன்படி தலைமை செயலாளர் தலைமையிலான வழிகாட்டுதல் குழுவில், சுகாதாரம், சமூக நலம், உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் முதன்மை செயலாளர்கள், என்சிசி துணை இயக்குநர், என்எஸ்எஸ் மண்டல இயக்குநர், நேரு யுவ கேந்திரா மாநில இயக்குநர், மத்திய அரசு துறை பிரதிநிதிகள், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப், ஐநா வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுஉள்ள மாநில அளவிலான குழுவில், சுகாதாரத்துறை, தேசிய சுகாதார திட்டம், ஊரக மருத்துவ பணிகள், மருத்து கல்வி, இந்தியமருத்துவ துறை, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை, மருத்துவ பணியாளர் தேர்வு குழும மேலாண்மை, குடும்ப நலத்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்டம், ஐசிடிஎஸ், ஊரக வளர்ச்சி, டிடிசிபி ஆகிய துறைகளின் இயக்குநர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்தோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழுவில், மேலே குறிப்பிட்டு துறைகளின் மாவட்ட அளவிலான இயக்குநர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநில வழிகாட்டுதல் குழு மாதம் ஒருமுறை, மாநில அளவிலான குழு 15 நாட்களுக்கு ஒருமுறை, மாவட்ட குழு வாரம் ஒருமுறை கூடி பணிகளை ஆய்வு செய்யும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x