Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கு டிச.2-ம் தேதி விசாரணை தொடக்கம்

நாமக்கல்: பள்ளிபாளையம் அக்ரஹாரத்தில் வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் டிச.2-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட உள்ளது.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராமம் கொல்லபாளையத்தார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. கடந்த அக்.29-ம் தேதி இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் ராஜா (25), அவரது நண்பர் ரவிக்குமார் (31) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி டிச.2-ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

குமாரபாளையம் வட்டாட்சியர், இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர், அருகில் வசிக்கும் பொதுமக்கள் 5 நபர்கள், ஆர்.ஐ., கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் டிச.2-ம் தேதி ஆஜராக வேண்டும், என கோட்டாட்சியர் ப. மணிராஜ் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x