Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
பொதுக் கொள்கை குறித்த சோ.எஸ்.ராமசாமி இருக்கை, சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ‘இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் இந்தியஊடகங்களின் பரிணாமம்’ என்றதலைப்பில் முழுநேர ஆய்வுப் படிப்புக்கு (பிஎச்.டி.) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதழியல், வரலாறு, பொதுக் கொள்கை சார்ந்த பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் இந்த முழுநேர ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும். தேர்தெடுக்கப்படுவோருக்கு மாதாந்திர உதவித் தொகை உண்டு.
விருப்பம் உள்ள மாணவர்கள் admissions@sastra.ac.in என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தங்கள் சுயவிவரக் குறிப்பை அனுப்ப வேண்டும்.
இத்தகவலை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT