Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM

பிடிபி கட்சியிலிருந்துமேலும் 3 பேர் விலகினர்

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), தேசிய மாநாடு கட்சி உள்ளிட்டவை இணைந்து இயக் கம் ஒன்றை அண்மையில் தொடங்கின.

இந்நிலையில், பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி,காஷ்மீரின் கொடியை மீண்டும்பறக்கவிடாமல், தேசியக் கொடிஏந்த மாட்டோம் என தெரிவித்தகருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, மெகபூபாவின் நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லாமல், அக்கட்சியை சேர்ந்த 3 தலைவர்கள் கடந்த மாதம் விலகினர்.

இந்நிலையில், டமன் பாஷின், பல்லாய்ல் சிங், ப்ரீதம் கோட்வல் ஆகியோர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x