Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM
திமுகவுடன் கூட்டணி தொடரும் என தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவித்துள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின், தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் பென்னாகரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்து நீண்ட நாட்களாகியும் இதுவரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்.
தருமபுரி எம்ஜிஆர் நகரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். `நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் வகையில், பாதிப்புகளை முறையாக கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT