Published : 26 Nov 2020 03:16 AM
Last Updated : 26 Nov 2020 03:16 AM
‘நிவர்’ அதிதீவிரப் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பயங்கர சூறைக்காற்றோடு, தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. ‘நிவர்’ கரையைக் கடந்த பிறகும் 6 மணி நேரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT