Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
புயல், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
‘நிவர்’ புயலால் தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களிலும், உள்பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இந்தப் பேரிடர்நேரத்தில் மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்குவதற்கு திமுக நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
பேரிடரிலிருந்து மக்களைக் காக்க திமுகவினர் ஒன்றிணைய வேண்டும். திமுகவினரின் உதவும் கரங்கள், ‘நிவர்’ புயல் நேரத்தில் நிவாரணமாக அமையட்டும். வடகிழக்குப் பருவமழை முடியும்வரை மக்களைப் பாதுகாப்பது திமுகவினரின் கடமை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT