Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

‘நிவர்’ புயல் எதிரொலிமருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகள் தள்ளிவைப்பு

‘நிவர்’ புயல் காரணமாக 25, 26,27-ம் தேதிகளில் நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக் கான தேர்வுகள் தள்ளிவைக் கப்பட்டுள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் 25-ம் தேதி மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்கவுள்ளது. இதனால் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து புயல் பாதிப்பு இருக்கும் நாட்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கும், நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நடத்தப்படுவதாக இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 25-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் டிச.15-க்கும் 26 மற்றும் 27-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் டிச.17மற்றும் 19-ம் தேதிகளுக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், 25-ம் தேதிநடைபெறவிருந்த எம்எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு தேர்வுகள் டிச.2-ம் தேதிக்கும், 26-ம்தேதி நடக்கவிருந்த தேர்வுகள் டிச.3-ம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x