Published : 24 Nov 2020 03:13 AM
Last Updated : 24 Nov 2020 03:13 AM

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடந்த என்கவுன்ட்டரில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் மண்டலம் கான்கர் மாவட்டத்தில் தடோகி வனப்பகுதி உள்ளது. அங்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ராவ்காட் காவல்நிலைய போலீஸாரும் சஷாஸ்த்ராசீமா பால் (எஸ்எஸ்பி) படையினரும் அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலுக்கு சுட்டுள்ளனர்.இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேர்உயிரிழந்தனர். எஸ்எஸ்பி வீரர்ஒருவர் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை சீராக உள்ளது. இந்த தகவலை காவல் துறையின் பஸ்தார் மண்டல ஐஜிபி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட 3 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x