Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM
கரோனா ஊரடங்கு காரணமாக மின்சார ரயில்கள் இயக்கப்படாததால், சென்னையில் ஓடும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் நேற்று முதல் 200 பேருந்துகள் அதிகரித்து இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னை மற்றும் புறநகரில் 2,300 பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்துகளின் எண்ணிக்கையை 2,500ஆக அதிகரித்துள்ளோம். பொதுமக்களும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகமாக வரும் பேருந்துகளை தவிர்த்து, அடுத்தடுத்து வரும் பேருந்துகளில் மக்கள் பயணம் செய்ய வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT