Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள உபயோகமற்ற செட்டிக் டேங்க் குழியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் நடத்திய விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான கிருஷ்ணராஜாவுக்கு(22) இக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, தனது சகோதரியுடன் பிரவீன்குமார் பழகி வந்ததை கண்டித்தும், அவர் கேட்காததால், அவருக்கு கடந்த 21-ம் தேதி இரவு அதிகளவு மது வாங்கி கொடுத்து அடித்துக் கொலை செய்ததை கிருஷ்ணராஜா ஒப்புக் கொண்டார் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து அவரை நேற்று போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT