Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய அறிவுரை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப. வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பலமாக காற்று வீசக்கூடும். எனவே, விவசாயிகள் அமைத்துள்ள பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட வேண்டும். காற்றால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமைக்குடிலை சுற்றி உயிர்வேலி அமைக்க வேண்டும்.

பல்லாண்டுப் பயிர்களான மா, கொய்யா, மாதுளை போன்றவற்றை முறையாக பாதுகாக்க வேண்டும். அவற்றின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து குவித்து வைக்கவேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். பூஞ்சாண நோய்களைத் தடுக்க நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். சிறிய செடிகள் காற்றால் பாதிக்காதவாறு தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்.

வாழைத்தார்களை முறையாக மூடிவைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும். காய்ந்துபோன இலைகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x