Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் 13,404 பேர்; புதிதாக 1,655 பேருக்கு தொற்று; ஒரேநாளில் முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் புதிதாக 1,655 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். முதியவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 982, பெண்கள் 673 என மொத்தம் 1,655 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 489, கோவையில் 154, செங்கல்பட்டில் 108 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 69,995 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 3,824 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 45,848 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 2,010 பேர் குண மடைந்து வீடுகளுக்குச் சென்றனர். 13,404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 8 பேர், தனியார் மருத்துவமனைகளில் 11 பேர் என நேற்று 19 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 8 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,605 ஆகஉயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,816 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 12,014,கோவையில் 47,535, செங்கல்பட்டில் 46,834, திருவள்ளூரில் 40,358 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

தமிழகத்தில் 217 அரசு மற்றும்தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 41,238 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 70,809 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 27,108 குழந்தைகள், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 44,828 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 98,059 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நிலை குறித்து ஜி.கே.வாசன், அமைச்சர்கள் விசாரிப்பு

தமாகா மூத்த தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், சில தினங் களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று உறுதியானது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவருக்கு உடலில் சில பிரச்சினைகள் இருப்பதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மருத்துவமனைக்கு நேற்று சென்ற சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டியை சந்தித்தனர். அப்போது ஞானதேசிகனின் உடல்நிலை பற்றியும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x