Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM
காங்கிரஸ் மூத்த தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதல்வருமான தருண் கோகோய்க்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அக்டோபர் 25-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 2-ம் தேதி, கரோனாவுக்கு பிந்தைய பாதிப்பாக அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் ஜிஎம்சிஎச்-ல் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜிஎம்சிஎச் கண்காணிப்பாளர் டாக்டர் அபிஜித் சர்மா நேற்று கூறும்போது, “தருண் கோகோய் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் தெரிகிறது. என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT