Published : 23 Nov 2020 03:11 AM
Last Updated : 23 Nov 2020 03:11 AM

டெல்லி திரும்பினார் அமித் ஷா

சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று காலை டெல்லி திரும்பினார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்த அமித் ஷா, கலைவாணர் அரங்கில் நடந்த தமிழக அரசு விழாவில் பங்கேற்று ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலாபேலஸ் ஓட்டலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள் கூட்டத்திலும், பாஜக மாநில மையக் குழு கூட்டத்திலும் பங்கேற்றார்.

இரண்டாவது நாளான நேற்று காலை தமிழக ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று காலை 10.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவரை வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x