Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

தேர்வுக்கு செல்வோர்சிறப்பு மின் ரயிலில்பயணிக்க அனுமதி

சென்னை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான மின்சார சிறப்பு ரயில்களில் தேர்வுகள், நேர்காணலுக்குச் செல்வோரும் இன்று (நவ. 23-ம் தேதி) முதல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அத்தியாவசிய பணிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக செங்கல்பட்டு, அரக்கோணம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை கடற்கரை, சென்ட்ரலுக்கு தினமும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, பல்வேறு வகையான தேர்வுகள், நேர்காணல்களுக்குச் செல்வோரும் இன்று முதல் மின்சார ரயில்களில் பயணம் செய்யலாம். பணிக்கும்போது அவர்கள் கட்டாயம் அதற்கான சான்றுகள் (ஹால் டிக்கெட், அலுவலக கடிதம்) வைத்திருக்க வேண்டும். அதுபோல், விளையாட்டு பயிற்சி பெறுபவர்களும் அதற்கான அங்கீகார அட்டை அல்லது சான்றுகளோடு பயணிக்கலாம். கூட்ட நெரிசலைத் தவிர்த்து, சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x