Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்துக்கு சிறந்த கடல்வள அரசு நிறுவன விருது மத்திய அரசு வழங்கியது

சென்னை

சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்துக்கு சிறந்த கடல்வள அரசு நிறுவன விருதை மத்திய மீன் வளத் துறை வழங்கியுள்ளது.

உலக மீன்வள தினத்தையொட்டி மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளஅமைச்சகத்தின் சார்பில் மீன்வளத் துறை சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாநிலங்கள், மாவட்டங்கள், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இணையம், கழகம், வாரியம் என்ற பிரிவின் கீழ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சிறந்த கடல்வள அரசு நிறுவனம் என்ற விருது பெற தேர்வு செய்யப்பட்டதாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முகமை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் உலக மீன்வள தின விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், மத்திய மீன்வள இணை அமைச்சர்  பிரதாப் சந்திர சாரங்கி, தமிழ்நாடு மீன்வளத் துறையின் செயலாளர் கோபாலுக்கு ரூ.5 லட்சம் நிதி ஊக்கத்தொகையுடன் கூடிய சான்றிதழை விருதாக வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x