Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவின் பேரில் டெல்லியில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசும் மத்திய அரசும் எடுத்து வருகின்றன. மத்திய ஆயுதப் போலீஸ் படையைச் சேர்ந்த மருத்துவர்கள் டெல்லிக்கு செல்வார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மேலும் கரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி, அமித் ஷா உத்தரவின் பேரில் டெல்லியில் கரோனா பரிசோதனைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அதிகரித்துள்ளதாகவும் ஒரு நாளைக்கு 27 ஆயிரம் என்று இருந்ததை 37 ஆயிரத்து 200 ஆக ஆர்டி - பிசிஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், நவம்பர் 15-ம் தேதி 12,055 மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில், 19-ம் தேதி 30,735 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் 13 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களி்ல் செய்யப்பட்டன என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT