Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரைபாஜக தலைவர் உட்பட 1,330 பேர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை சென்ற பாஜக மாநிலத் தலைவர் முருகன் உட்பட 1,330 பேர் மீது வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக பாஜக சார்பில் அரசின் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரைக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இச்சூழலில் வேல் யாத்திரையில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 1,330 பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 1,330 பேர் மீது 5 பிரிவுகளில் வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x