Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 7.68 லட்சத்தை கடந்தது ஒரே நாளில் புதியதாக 1,663 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 586 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று புதியதாக 1663 பேருக்கு கரோனா வைரஸ்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 27 ஆயிரத்து 061 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 6 லட்சத்து 43 ஆயிரத்து 546 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 97 ஆயிரத்து 733 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மொத்தம் ஒருகோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 919 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 12 ஆயிரத்து916 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இதுவரையில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 பேர் குணமடைந்துள்ளனர். இதில், நேற்று மட்டும்2 ஆயிரத்து 133 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 11 ஆயிரத்து 586 பேர் இறந்துள்ளனர். நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை முதலிடம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பால் இறப்பது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது. அதன்படி, சென்னையில் மட்டும்அதிகபட்சமாக 3,808, செங்கல்பட்டு - 705, திருவள்ளூர் - 645, கோயம்புத்தூர் - 597, மதுரை - 433 பேரும் இறந்துள்ளனர். மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x