Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்

கேளம்பாக்கம் அருகே பால்வாங்கச் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயன்ற2 பேர் பொதுமக்களிடம்சிக்கினர். அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தினர்.

கேளம்பாக்கம் அருகேஉள்ள புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அமிர்தா(34). இவர்பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். பால்வாங்கிக் கொண்டு சாலையைகடக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் தங்கச்சங்கிலி சிக்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இருசக்கர வாகனத்தை ஓட்டியவாறு தரதரவென சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

அந்தப் பெண்ணின்அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்ததும், அவர்கள் இருசக்கர வாகனத்தையும், அந்த பெண்ணையும் விட்டுவிட்டு அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சென்று பதுங்கிக் கொண்டனர். அவர்களை பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதுடன், அவர்கள் கொண்டு வந்த வாகனத்தையும் தீ வைத்து எரித்தனர்.

பின்னர், இருவரையும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x