Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
திருக்கனூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்த உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற் றப்பட்டுள்ளார்.
திருக்கனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்தகார்த்திக் (எ) பிரம்மன் (36), அச்சிறுமியை வழிமறித்து பாலியல் வன் கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த சிறுமி கடுமையாக போராடியதால் கார்த்திக் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். சிறுமி சவுக்கு மரத்தில் கட்டப்பட்டிருப்பதை அறிந்த அவ்வழியாக சென்றவர்கள் சிறுமியை மீட்டு அவரது தாயாரிடம் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில்இருந்து திருக்கனூர் காவல் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில், போலீஸார் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாக தெரிகிறது.
இதையறிந்த சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா திருக்கனூர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்றுவிசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எடுத்த நட வடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்காத போலீஸாரை அவர் கண்டித்தார். அதன்பிறகு கார்த்திக்கை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை முயற்சியில் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்ததால் திருக்கனூர் போலீஸ் உதவிஆய்வாளர் சிவக்குமாரை ஆயுதப் படைக்கு மாற்றி வாய்மொழி உத்தரவாக சீனியர் எஸ்பியிடம் இருந்து நேற்று முன்தினம் இரவு வந்த தகவலையடுத்து அங்கிருந்து உடனேவிடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று அவர் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தார். இந்த நடவடிக்கை திருக்கனூர் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT