Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
சொத்துக் குவிப்பு வழக்கில் சார்-பதிவாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் ரூ. 50 லட்சத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வில்லியனூர் சார்-பதிவாளராக பணியாற்றி வந்தவர் குருபாதம். இவர், கடந்த 1.1.1996 முதல் 10.4.2008 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ. 34 லட்சம் மதிப்பில் தனதுபெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி சிபிஐ நீதிமன்ற நீதிபதி தனபால், குருபாதத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகள் ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக சென்னை சிபிஐ அலுவலகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT