Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கஐஆர்பிஎன் காவலர்களுக்கு பயிற்சி

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஐஆர்பிஎன் காவலர்களுக்கு என்ஐஏ குழுவினர் சிறப்பு பயிற்சி அளித்தனர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

நாடு முழுவதும் மாநிலங்களில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தேசியபுலனாய்வு முகமை (என்ஐஏ) அதி காரிகள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின் றனர்.

இந்த நிலையில் சென்னை வண்டலூ ரில் உள்ள என்ஐஏ தென்மண்டல அலு வலகத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு படையில் இடம்பெற்றுள்ள மேஜர் ராஜேஷ் தாக்கூர் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்து சட்டப்பேரவை வளாகத்தில் ஆய்வு மேற்கெண்டனர்.

அப்போது சட்டப்பேரவை காவலர் களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

புதுச்சேரிக்குள் வருகிற 23-ம் தேதிமாலை 5 மணி முதல் மறுநாள் காலை5 மணி வரை எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் ஊடுருவுவதுபோல் ஒத் திகை நடத்தப்பட உள்ளது.

இதை முறியடிக்கும் வகையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் போலீஸாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சட்டப் பேரவை, ஆளுநர் மாளிகை, தலைமை செயலகம் போன்ற பகுதிகளில் எவ்வாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்? எந்தெந்த வகையில் ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது? என் பதை விளக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x