Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி யின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் வெள்ளிக்கிழமை முதல் ஆலோ சனை நடத்தி வருகிறார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முத்தியால்பேட்டை மற்றும் ராஜ் பவன் தொகுதி நிர்வாகிகளுடன் தொடக்க நாளில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல் வர் நாராயணசாமி, எம்பி வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் ஆகியோர் நிர்வாகிகள் கருத்துகளை கேட்டறிந்தனர். கூட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பெற்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும். இதேபோல் முதல்வர் நாராயணசாமி முத்தியால் பேட்டை தொகுதியிலும், ராஜ்பவன் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏலட்சுமி நாராயணனும் போட்டி யிடவும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே நேற்று நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இன்று நெட்டப் பாக்கம், பாகூர், ஏம்பலம் தொகுதிநிர்வாகிகளிடம் கருத்து கேட்கப் படுகிறது.
திமுகவும் மும்முரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT