Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் மத்திய அமைச்சர்களுக்கு புதுச்சேரி பாஜக தலைவர் கடிதம்

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 28-ம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புதுச்சேரி பாஜக சார்பில் வலியுறுத்தினோம்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் ஏழை எளிய மாணவர்களே ஆவர். தனியாக சிறப்பு பயிற்சி பெற கட்டணம் செலுத்தி இவர்களால் படிக்க முடிவதில்லை.

மருத்துவப் படிப்பிலும், நீட் நுழைவு தேர்விலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை, சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x