Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

மணல் திருடியதாக வழக்கு போடி அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், போடி அருகே மழை நீரால் ஓடை கரை உடைந்து, வயல்வெளிகளில் தண்ணீர் புகுவதைத் தடுக்க மணல் அள்ளிய விவசாயிகள் மீது போலீ ஸார் நடவடிக்கை எடுத்தனர். இதைக் கண்டித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் , போடி அருகே டி.தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர் பொட்டிப்புரம் புதூர் அருகே உள்ள ஓடையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தார்.

போடி தாலுகா போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததுடன், மணிகண்டனையும் கைது செய்தனர். இந்நிலையில், மழை நீரானது ஓடையின் கரையை உடைத்து விளைநிலங்களில் புகுந்தது. அதைத் தடுக்கவே விவசாயிகள் ஒருங்கிணைந்து மணலை அள்ளியதாக போலீஸாரிடம் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், போலீஸார் இதனை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, பொட்டிப்புரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் பூத் கமிட்டியை ஆய்வு செய்வதற்காக அங்கு வந்திருந்தார். அவரிடம் விவசாயிகள் இப்பிரச்சினையைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன் அப்பகுதியைப் பார்வையிட்டார். உடன் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பேசி மண் அள்ளும் இயந்திரத்தை விடுவிக்க கேட்டுக் கொண்டார்.

பின்னர் விவசாயிகள் கூறுகையில், வெள்ளத்தில் இருந்து பயிர் களைக் காக்கவே ஓடையில் மண் அள்ளினோம். ஆனால், மணல் திருட்டு என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்தவர்களை விடுவிக்கா விட்டால், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x