Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

கிறிஸ்தவ சமூக நீதி பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழக கத்தோலிக்கத் திருச்சபை யில் தலித் குருக்களை ஆயர் களாக நியமிக்கக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில், உத்தமபாளை யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விண்ணரசி ஆலயம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் பா.சபரி தலைமை வகித்தார். செயலாளர் சோ.சு.சுருளி, பொருளாளர் பெர்க்மான்ஸ், துணைச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கத்தோலிக்கத் திருச்சபையில் ஆயர்கள் மற்றும் பேராயர்கள் நியமனத்தில் சாதியப் பாகுபாடு பின்பற்றப்படுவதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்டச் செய்தி தொடர் பாளர் பாரதி, கம்பம் தொகுதி செயலாளர் முருகேசன், துணைச் செயலாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x