Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
ராமேசுவரத்தில் மீனவர் கொலை செய்யப்பட்டார்.
ராமேசுவரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (24). இவர் கடலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.
நேற்று காலை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகக் கடற்கரை அந்தோணியார் கோயில் பகுதியில் மனோஜ் குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த ராமேசுவரம் துறைமுகக் காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT