Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

பழநி கோயில் விடுதி கழிவு நீரால் விவசாய நிலம் பாதிப்பு பசுமை தீர்ப்பாயத்தில் வல்லுநர்கள் குழு ஆய்வறிக்கை தாக்கல்

சென்னை

பழநி கோயில் விடுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாய நிலங்கள் மாசடைவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வல்லுநர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பழநி கோயில் நிர்வாகம் அமைத்துள்ள விடுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் தங்களின் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சி.ரவிச்சந்திரன், ஆர்.விஜயலட்சுமி, எம்.ராஜேந்திரன் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் 2017-ம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்தனர். இது குறித்து ஆய்வு செய்ய பழநி சார் ஆட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு வாாிய அதிகாாி உள்ளிட்ட குழுவை பசுமை தீர்ப்பாய அமர்வுநியமித்தது. இக்குழுவினர் இடைக்கால ஆய்வறிக் கையை பசுமை தீர்ப்பாய அமர்வின் நீதித்துறைஉறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் தாக்கல் செய்தனர். அதில், தங்கும் விடுதியிலிருந்து தினமும் வெளியேறும் 42 ஆயிரம் லிட்டர் கழிவுநீரால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆய்வறிக்கையை இரு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், அடுத்த விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x